அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சிந்தனையை சீர் தூக்குங்கள்

சிந்தனையை துளிர் விட்டு எழுப்பாத எந்த ஒரு சமுகமும்
சீரான நேர்கோட்டிலோ சிறப்பான வாழ்வையோ அமைத்து கொள்ள முடியாது

இன்றைய காலகட்டத்தில் நம் சமுகத்தின் கல்வி முறை கால்பங்கு கூட முழுமை அடையவில்லை

கல்வி அறிவு இல்லாமையால் இன்றைய சமுகத்தின் நிலையானது எந்த ஒரு அரசுடைய சட்டதிட்டங்களை கூட அறியமுடியவதில்லை

ஒருபுறம் நம் சமுகத்தின் மீது காரி உமிழும் சில கயவர்களால் நாம் நசுக்கபட்டு கொண்டிருக்கிறோம் என்பது மறக்க முடியா உண்மை

நாம் விழித்துக்கொள்ளாதவரை இன்னும் கொட்டி கொண்டு தான் இருப்பார்கள்

நம் சமுகத்திற்க்கென்று தனி ஊடகம் இருந்தால் இந்த சமுகம் வெற்றி பெறலாம் என கனவு மட்டும் கண்டால் பத்தாது

ஊடகத்தை உருவாக்க சில வசதி படைத்தவர்கள் இருந்தாலும் அதை திறம்பட நடத்த எத்தனை ஊடகவியாளர்கள் நம் சமுகத்தில் உள்ளனர் .
விரல் விட்டு என்ன கூடிய அளவு மிக சொற்பமே

வரலாற்று சுவடுகளையும் உலக்கல்வியையும் கற்று கொள்ள தேடலோடு முற்ப்படுங்கள்

எந்த ஒரு தலைப்பு கொடுத்தாலும்
திறம்பட பேச எழுத முனையுங்கள்
மார்கக வரம்போடு நாம் களம் காண இந்த முகநூல் ஓரு அறிய பொக்கிஷம்

சிந்தனை சீர்தூக்குங்கள்
சீராக வாழ சமுகத்திற்க்காக
முனைப்பு கொடுங்கள்
உங்களின் தேடல் ஒவ்வொன்றும்
நம் சமுகத்தை சீர் தூக்க உதவட்டும் #வே

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு