ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரமான அபுதாபியில், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து "பொற்காலம் திரும்பட்டும்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை இன்று (13-03-16) நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் நிறுவனர் 'சமூக நீதி போராளி' CMN சலீம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இஸ்லாமிய கலச்சார பின்புலத்தோடு வளர்சிக்கான சரியான இலக்கை சமூகத்திற்கு முன்னிறுத்தும் வழிகாட்டிகளே இன்றைய முஸ்லிம்களின் தேவை. மேலும், உணர்ச்சியை தூண்டும் வேளையை நிறுத்தி அறிவை தூண்டும் வேளையை அதிகமாக செய்ய வேண்டும் என்று தனது சிறப்புரையில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அபுதாபியில் வாழும் பல தமிழ் இஸ்லாமிய நபர்கள் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்