ஒட்டுமொத்த இந்தியாவும் பார்வை செலுத்திய பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டெல்லி JNU மாணவர் முகமது முஹ்ஸின் அபார வெற்றி பெற்றுள்ளார்.
அப்சல் குரு தூக்கில் போட்ட நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட JNU மாணவர் பேரவை தலைவர் கண்ணையா குமார் தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் டெல்லி பல்கலைக்கழக மாணவர் கேரளாவைச சேர்ந்த முகமது முஹ்ஸின்.
பட்டாம்பி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் முகமது முஹ்ஸின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது ஊடகங்கள் இந்த தொகுதியை நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.
தேர்தல் களத்தில் இவருக்கு ஆதரவாக கண்ணையா குமார் பிரச்சாரம் செய்த போது சங்க பரிவாரங்கள் முகமது முஹ்ஸினை தேச விரோதியாக சித்தரிக்கப்பட்ட நிலையில் சுமார் 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்வெற்றி பெற்றுள்ளார்.
தகவல் : Colachel Azheem
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்